Kural 259

Thiru Kural 259

Chapter 26: புலால் மறுத்தல்

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று.

Avisorin Thaayiram Vettalin Ondran

Uyirsekuth Thunnaamai Nandru

English Translation

Not to-kill-and-eat, truly Excels thousand pourings of ghee!

Couplet

Than thousand rich oblations, with libations rare,Better the flesh of slaughtered beings not to share

Explanation

Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc, in a thousand sacrifices

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

Solomon Pappaiah

(மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.

Kalaignar

நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது