Chapter 26

புலால் மறுத்தல்

Pulaanmaruththal

Abstinence from Flesh

10 kurals

Kural 251 தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?
What graciousness can one command who feeds his flesh by flesh gourmand
Kural 252 பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
The thriftless have no property And flesh-eaters have no pity
Kural 253 படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
Who wields a steel is steel-hearted Who tastes body is hard-hearted
Kural 254 ருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்.
If merciless it is to kill, To kill and eat is disgraceful
Kural 255 உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
Off with flesh; a life you save The eater hell's mouth shall not waive!
Kural 256 தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
None would kill and sell the flesh For eating it if they don't wish
Kural 257 உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.
From eating flesh men must abstain If they but feel the being's pain
Kural 258 செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
Whose mind from illusion is freed Refuse on lifeless flesh to feed
Kural 259 அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
Not to-kill-and-eat, truly Excels thousand pourings of ghee!
Kural 260 கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
All lives shall lift their palms to him Who eats not flesh nor kills with whim