Kural 278

Thiru Kural 278

Chapter 28: கூடா ஒழுக்கம்

மனத்தது மாசாக மாண்டார் நீராடி

மறைந்தொழுகு மாந்தர் பலர்.

Manaththadhu Maasaaka Maantaar Neeraati

Maraindhozhuku Maandhar Palar

English Translation

Filthy in mind some bathe in streams Hiding sins in showy extremes

Couplet

Many wash in hollowed waters, living lives of hidden shame;Foul in heart, yet high upraised of men in virtuous fame

Explanation

There are many men of masked conduct, who perform their ablutions, and (make a show) of

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.

Solomon Pappaiah

மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து வருபவர்போல் போலி வெளிச்சம் - இப்படி வாழும் மனிதர் பலர் இருக்கின்றனர்.

Kalaignar

நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்