Kural 279

Thiru Kural 279

Chapter 28: கூடா ஒழுக்கம்

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன

வினைபடு பாலால் கொளல்.

Kanaikotidhu Yaazhkotu Sevvidhuaang Kanna

Vinaipatu Paalaal Kolal

English Translation

Know men by acts and not by forms Strait arrow kills, bent lute but charms

Couplet

Cruel is the arrow straight, the crooked lute is sweet,Judge by their deeds the many forms of men you meet

Explanation

As, in its use, the arrow is crooked, and the curved lute is straight, so by their deeds, (and not by their appearance) let (the uprightness or crookedness of) men be estimated

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.

Solomon Pappaiah

வடிவால் நேரானது என்றாலும் செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது ஆயினும் செயலால் யாழ் இனிது. அதனால் தோற்றத்தால் அன்றிச் செயலால் மனிதரை எடை போடுக.

Kalaignar

நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும் வளைந்து தோன்றும் யாழ், இசை, இன்பம் பயக்கும் அது போலவே மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும்