Kural 29

Thiru Kural 29

Chapter 3: நீத்தார் பெருமை

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது.

Kunamennum Kundreri Nindraar Vekuli

Kanameyum Kaaththal Aridhu

English Translation

Their wrath, who've climb'd the mount of good, Though transient, cannot be withstood

Couplet

The wrath 'tis hard e'en for an instant to endure,Of those who virtue's hill have scaled, and stand secure

Explanation

The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.

Solomon Pappaiah

நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.

Kalaignar

குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது