Chapter 3

நீத்தார் பெருமை

Neeththaar Perumai

The Greatness of Ascetics

10 kurals

Kural 21 ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
No merit can be held so high As theirs who sense and self deny
Kural 22 துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
To con ascetic glory here Is to count the dead upon the sphere
Kural 23 இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
No lustre can with theirs compare Who know the right and virtue wear
Kural 24 உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
With hook of firmness to restrain The senses five, is heaven to gain
Kural 25 ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
Indra himself has cause to say How great the power ascetics' sway
Kural 26 செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
The small the paths of ease pursue The great achieve things rare to do
Kural 27 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
They gain the world, who grasp and tell Of taste, sight, hearing, touch and smell
Kural 28 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
Full-worded men by what they say, Their greatness to the world display
Kural 29 குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
Their wrath, who've climb'd the mount of good, Though transient, cannot be withstood
Kural 30 அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
With gentle mercy towards all, The sage fulfils the vitue's call