அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.
Arivinaan Aakuva Thunto Piridhinnoi
Thannoipol Potraak Katai
English Translation
What does a man from wisdom gain If he pines not at other's pain?
Couplet
From wisdom's vaunted lore what doth the learner gain,If as his own he guard not others' souls from pain
Explanation
What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep off pain from another as much as from himself ?
Tamil Commentary
Interpretations
Mu. Varadarajan
மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.
Solomon Pappaiah
அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?
Kalaignar
பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை