Kural 320

Thiru Kural 320

Chapter 32: இன்னா செய்யாமை

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர்.

Noyellaam Noiseydhaar Melavaam Noiseyyaar

Noyinmai Ventu Pavar

English Translation

No harm is done by peace-lovers For pains rebound on pain-givers

Couplet

O'er every evil-doer evil broodeth still;He evil shuns who freedom seeks from ill

Explanation

Sorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.

Solomon Pappaiah

செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.

Kalaignar

தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது