Kural 348

Thiru Kural 348

Chapter 35: துறவு

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி

வலைப்பட்டார் மற்றை யவர்.

Thalaippattaar Theerath Thurandhaar Mayangi

Valaippattaar Matrai Yavar

English Translation

Who renounce all are free from care Others suffer delusive snare

Couplet

Who thoroughly 'renounce' on highest height are set;The rest bewildered, lie entangled in the net

Explanation

Those who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God); all others wander in confusion, entangled in the net of (many) births

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.

Solomon Pappaiah

ஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள் அகப்பட்டவரே.

Kalaignar

அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள் அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள்