Kural 347

Thiru Kural 347

Chapter 35: துறவு

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்

பற்றி விடாஅ தவர் க்கு.

Patri Vitaaa Itumpaikal Patrinaip

Patri Vitaaa Thavarkku

English Translation

Grief clings on and on to those Who cling to bonds without release

Couplet

Who cling to things that cling and eager clasp,Griefs cling to them with unrelaxing grasp

Explanation

Sorrows will never let go their hold of those who give not up their hold of desire

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.

Solomon Pappaiah

ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.

Kalaignar

பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன