Kural 359

Thiru Kural 359

Chapter 36: மெய்யுணர்தல்

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்

சார்தரா சார்தரு நோய்.

Saarpunarndhu Saarpu Ketaozhukin Matrazhiththuch

Chaardharaa Saardharu Noi

English Translation

Know the Refuge; off with bondage Be free from ills of thraldom, O sage

Couplet

The true 'support' who knows- rejects 'supports' he sought before-Sorrow that clings all destroys, shall cling to him no more

Explanation

He who so lives as to know Him who is the support of all things and abandon all desire, will be freed from the evils which would otherwise cleave to him and destroy (his efforts after absorption)

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.

Solomon Pappaiah

எல்லாப் பொருள்களுக்கும் இடமாகிய மெய்ப்பொருளை உணர்ந்து பற்றின்றி வாழ்ந்தால், பற்ற வரும் துன்பங்கள் ஒழுக்க உணர்வை அழி்த்துப் பற்ற மாட்டா.

Kalaignar

துன்பங்கள் நம்மைச் சாராமல் இருக்க வேண்டுமானால், அத்துன்பங்களுக்குக் காரணமானவற்றை உணர்ந்து அவற்றின் மீதுள்ள பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும்