Chapter 36

மெய்யுணர்தல்

Meyyunardhal

Truth-Conciousness

10 kurals

Kural 351 பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
That error entails ignoble birth Which deems vain things as things of worth
Kural 352 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.
Men of spotless pure insight Enjoy delight devoid of night
Kural 353 ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.
To doubtless minds whose heart is clear More than earth heaven is near
Kural 354 ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
Knowledge of five senses is vain Without knowing the Truth within
Kural 355 எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
Knowledge is truth of things to find In every case of every kind
Kural 356 கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.
Who learn and here the Truth discern Enter the path of non-return
Kural 357 ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
One-minded sage sees inner-truth He is free from thoughts of rebirth
Kural 358 பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
It is knowledge to know Self-Truth And remove the folly of birth
Kural 359 சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.
Know the Refuge; off with bondage Be free from ills of thraldom, O sage
Kural 360 காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Woes expire when lust, wrath, folly Expire even to name, fully