Kural 382

Thiru Kural 382

Chapter 39: இறைமாட்சி

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

Anjaamai Eekai Arivookkam Innaankum

Enjaamai Vendhark Kiyalpu

English Translation

Courage, giving, knowledge and zeal Are four failless features royal

Couplet

Courage, a liberal hand, wisdom, and energy: these fourAre qualities a king adorn for evermore

Explanation

Never to fail in these four things, fearlessness, liberality, wisdom, and energy, is the kingly character

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.

Solomon Pappaiah

அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் - இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க வேண்டும்.

Kalaignar

துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்