Kural 384

Thiru Kural 384

Chapter 39: இறைமாட்சி

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா

மானம் உடைய தரசு.

Aranizhukkaa Thallavai Neekki Maranizhukkaa

Maanam Utaiya Tharasu

English Translation

A brave noble king refrains from vice Full of virtue and enterprise

Couplet

Kingship, in virtue failing not, all vice restrains,In courage failing not, it honour's grace maintains

Explanation

He is a king who, with manly modesty, swerves not from virtue, and refrains from vice

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.

Solomon Pappaiah

தனக்குச் சொல்லப்பட்ட அறத்திலிருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கி, வீரத்தில் தவறாமல் நின்று மானத்தைப் பெரிதாக மதிப்பதே அரசு.

Kalaignar

அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்