Kural 415

Thiru Kural 415

Chapter 42: கேள்வி

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

Izhukkal Utaiyuzhi Ootrukkol Atre

Ozhukka Mutaiyaarvaaich Chol

English Translation

Virtuous men's wisdom is found A strong staff on slippery ground

Couplet

Like staff in hand of him in slippery ground who straysAre words from mouth of those who walk in righteous ways

Explanation

The words of the good are like a staff in a slippery place

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.

Solomon Pappaiah

கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும்.

Kalaignar

வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்