Chapter 42

கேள்வி

Kelvi

Hearing

10 kurals

Kural 411 செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.
Wealth of wealths is listening's wealth It is the best of wealths on earth
Kural 412 செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
Some food for the stomach is brought When the ear gets no food for thought
Kural 413 செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
Whose ears get lots of wisdom-food Equal gods on oblations fed
Kural 414 கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
Though not learned, hear and heed That serves a staff and stay in need
Kural 415 இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
Virtuous men's wisdom is found A strong staff on slippery ground
Kural 416 எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
Lend ear to good words however few That much will highly exalt you
Kural 417 பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.
Who listen well and learn sharply Not ev'n by slip speak foolishly
Kural 418 கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
That ear though hearing is dulled Which is not by wisdom drilled
Kural 419 நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.
A modest mouth is hard for those Who care little to counsels wise
Kural 420 செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்?
Who taste by mouth and not by ear What if they fare ill or well here?