Kural 417

Thiru Kural 417

Chapter 42: கேள்வி

பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்

தீண்டிய கேள்வி யவர்.

Pizhaith Thunarndhum Pedhaimai Sollaa

Rizhaiththunarn Theentiya Kelvi Yavar

English Translation

Who listen well and learn sharply Not ev'n by slip speak foolishly

Couplet

Not e'en through inadvertence speak they foolish word,With clear discerning mind who've learning's ample lessons heard

Explanation

Not even when they have imperfectly understood (a matter), will those men speak foolishly, who have profoundly studied and diligently listened (to instruction)

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.

Solomon Pappaiah

நுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து, கேள்வி ஞானத்தால் நிறைந்தவர், பிழைபட உணர்ந்தபோதும், அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார்.

Kalaignar

எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்