Kural 420

Thiru Kural 420

Chapter 42: கேள்வி

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்?

Seviyir Suvaiyunaraa Vaayunarvin Maakkal

Aviyinum Vaazhinum En?

English Translation

Who taste by mouth and not by ear What if they fare ill or well here?

Couplet

His mouth can taste, but ear no taste of joy can give!What matter if he die, or prosperous live

Explanation

What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear ?

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.

Solomon Pappaiah

செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன?

Kalaignar

செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்