Kural 413

Thiru Kural 413

Chapter 42: கேள்வி

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்

ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

Seviyunavir Kelvi Yutaiyaar Aviyunavin

Aandraaro Toppar Nilaththu

English Translation

Whose ears get lots of wisdom-food Equal gods on oblations fed

Couplet

Who feed their ear with learned teachings rare,Are like the happy gods oblations rich who share

Explanation

Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrifices

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.

Solomon Pappaiah

செவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்.

Kalaignar

குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்