Kural 429

Thiru Kural 429

Chapter 43: அறிவுடைமை

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய்.

Edhiradhaak Kaakkum Arivinaark Killai

Adhira Varuvadhor Noi

English Translation

No frightful evil shocks the wise Who guard themselves against surprise

Couplet

The wise with watchful soul who coming ills foresee;From coming evil's dreaded shock are free

Explanation

No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

Solomon Pappaiah

நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை.

Kalaignar

வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது