Kural 453

Thiru Kural 453

Chapter 46: சிற்றினம் சேராமை

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்

இன்னான் எனப்படுஞ் சொல்.

Manaththaanaam Maandhark Kunarchchi Inaththaanaam

Innaan Enappatunj Chol

English Translation

Wisdom depends upon the mind The worth of man upon his friend

Couplet

Perceptions manifold in men are of the mind alone;The value of the man by his companionship is known

Explanation

The power of knowing is from the mind; (but) his character is from that of his associates

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

Solomon Pappaiah

மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்.

Kalaignar

ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொருத்து அமையும் அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும்