Chapter 46

சிற்றினம் சேராமை

Sitrinanjeraamai

Avoiding mean Associations

10 kurals

Kural 451 சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
The ignoble the noble fear The mean hold them as kinsmen dear
Kural 452 நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.
With soil changes water's taste With mates changes the mental state
Kural 453 மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.
Wisdom depends upon the mind The worth of man upon his friend
Kural 454 மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.
Wisdom seems to come from mind But it truly flows from the kind
Kural 455 மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.
Purity of the thought and deed Comes from good company indeed
Kural 456 மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.
Pure-hearted get good progeny Pure friendship acts with victory
Kural 457 மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.
Goodness of mind increases gain Good friendship fosters fame again
Kural 458 மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.
Men of wisdom, though good in mind In friends of worth a new strength find
Kural 459 மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.
Good mind decides the future bliss Good company gains strength to this
Kural 460 நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.
No help good company exeeds; The bad to untold anguish leads