Kural 497

Thiru Kural 497

Chapter 50: இடனறிதல்

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை

எண்ணி இடத்தால் செயின்.

Anjaamai Allaal Thunaiventaa Enjaamai

Enni Itaththaal Seyin

English Translation

No aid but daring dash they need When field is chosen right for deed

Couplet

Save their own fearless might they need no other aid,If in right place they fight, all due provision made

Explanation

You will need no other aid than fearlessness, if you thoroughly reflect (on what you are to do), and select (a suitable) place for your operations

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

(செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை.

Solomon Pappaiah

செய்யும் செயலை இடைவிடாமல் எண்ணி, இடம் அறிந்து செயதால், பகைக்குப் பயப்படாத மனஉறுதி போதும்; வேறு துணை தேவை இல்லை.

Kalaignar

ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை