Kural 500

Thiru Kural 500

Chapter 50: இடனறிதல்

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா

வேலாள் முகத்த களிறு.

Kaalaazh Kalaril Nariyatum Kannanjaa

Velaal Mukaththa Kaliru

English Translation

A fox can kill a war tusker Fearless with feet in deep quagmire

Couplet

The jackal slays, in miry paths of foot-betraying fen,The elephant of fearless eye and tusks transfixing armed men

Explanation

A fox can kill a fearless, warrior-faced elephant, if it go into mud in which its legs sink down

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும்.

Solomon Pappaiah

பாகனுக்கு அடங்காததும், தன்னை எதிர்த்துப் பிடித்த வீரனைத் தன் தந்தத்தால் தாக்கித் தூக்கியதுமான ஆண்யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகூட அதைக் கொன்றுவிடும்.

Kalaignar

வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்