Kural 504

Thiru Kural 504

Chapter 51: தெரிந்து தெளிதல்

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.

Kunamnaatik Kutramum Naati Avatrul

Mikainaati Mikka Kolal

English Translation

Good and evil in man weigh well Judge him by virtues which prevail

Couplet

Weigh well the good of each, his failings closely scan,As these or those prevail, so estimate the man

Explanation

Let (a king) consider (a man's) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.

Solomon Pappaiah

ஒருவனின் குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து இரண்டிலும் எவை அதிகமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து குணங்களின் மிகுதியைக் கொண்டே அவனைப் பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.

Kalaignar

ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்