Chapter 51

தெரிந்து தெளிதல்

Therindhudhelidhal

Selection and Confidence

10 kurals

Kural 501 அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.
Pleasure, gold, fear of life Virtue- Test by these four and trust the true
Kural 502 குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.
Spotless name of noble birth Shamed of stain-that choice is worth
Kural 503 அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.
Though deep scholars of stainless sense Rare is freedom from ignorance
Kural 504 குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
Good and evil in man weigh well Judge him by virtues which prevail
Kural 505 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.
By the touchstone of deeds is seen If any one is great or mean
Kural 506 அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.
Choose not those men without kinsmen Without affine or shame of sin
Kural 507 காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.
On favour leaning fools you choose; Folly in all its forms ensues
Kural 508 தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.
To trust an untried stranger brings Endless troubles on all our kins
Kural 509 தே றற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.
Trust not without testing and then Find proper work for trusted men
Kural 510 தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.
Trust without test; The trusted doubt; Both entail troubles in and out