Kural 508

Thiru Kural 508

Chapter 51: தெரிந்து தெளிதல்

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை

தீரா இடும்பை தரும்.

Theraan Piranaith Thelindhaan Vazhimurai

Theeraa Itumpai Tharum

English Translation

To trust an untried stranger brings Endless troubles on all our kins

Couplet

Who trusts an untried stranger, brings disgrace,Remediless, on all his race

Explanation

Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not known

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.

Solomon Pappaiah

நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.

Kalaignar

ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்