Kural 510

Thiru Kural 510

Chapter 51: தெரிந்து தெளிதல்

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்.

Theraan Thelivum Thelindhaankan Aiyuravum

Theeraa Itumpai Tharum

English Translation

Trust without test; The trusted doubt; Both entail troubles in and out

Couplet

Trust where you have not tried, doubt of a friend to feel,Once trusted, wounds inflict that nought can heal

Explanation

To make choice of one who has not been examined, and to entertain doubts respecting one who has been chosen, will produce irremediable sorrow

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும்.

Solomon Pappaiah

ஒருவனை ஆராயாமல் பதவியில் அமர்த்துவதும், அமர்த்தியபின் அவன்மீதே சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்.

Kalaignar

ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும், ஆராய்ந்து தேர்வு செய்து ஏற்றுக்கொண்டபின் அவரைக் சந்தேகப்படுவதும் தீராத துன்பத்தைத் தரும்