Kural 511

Thiru Kural 511

Chapter 52: தெரிந்து வினையாடல்

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த

தன்மையான் ஆளப் படும்.

Nanmaiyum Theemaiyum Naati Nalampurindha

Thanmaiyaan Aalap Patum

English Translation

Employ the wise who will discern The good and bad and do good turn

Couplet

Who good and evil scanning, ever makes the good his joy;Such man of virtuous mood should king employ

Explanation

He should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.

Solomon Pappaiah

ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்.

Kalaignar

நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்த, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள்