Kural 512

Thiru Kural 512

Chapter 52: தெரிந்து வினையாடல்

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை

ஆராய்வான் செய்க வினை.

Vaari Perukki Valampatuththu Utravai

Aaraaivaan Seyka Vinai

English Translation

Let him act who resource swells; Fosters wealth and prevents ills

Couplet

Who swells the revenues, spreads plenty o'er the land,Seeks out what hinders progress, his the workman's hand

Explanation

Let him do (the king's) work who can enlarge the sources (of revenue), increase wealth and considerately prevent the accidents (which would destroy it)

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.

Solomon Pappaiah

பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக.

Kalaignar

வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன்