Kural 527

Thiru Kural 527

Chapter 53: சுற்றந் தழால்

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள.

Kaakkai Karavaa Karaindhunnum Aakkamum

Annanee Raarkke Ula

English Translation

The crows hide not; thy call and eat Welfare abides a man of heart

Couplet

The crows conceal not, call their friends to come, then eat;Increase of good such worthy ones shall meet

Explanation

The crows do not conceal (their prey), but will call out for others (to share with them) while they eat it; wealth will be with those who show a similar disposition (towards their relatives)

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.

Solomon Pappaiah

காக்கை தன் உணவை மறைக்காமல், தன் இனத்தைச் சத்தமிட்டு அழைத்து உண்ணும்; இதுபோன்ற குணம் உடையவர்க்கே செல்வமும் உள ஆகும்.

Kalaignar

தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும் அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு