Kural 537

Thiru Kural 537

Chapter 54: பொச்சாவாமை

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்

கருவியால் போற்றிச் செயின்.

Ariyaendru Aakaadha Illaipoch Chaavaak

Karuviyaal Potrich Cheyin

English Translation

With cautious care pursue a thing Impossible there is nothing

Couplet

Though things are arduous deemed, there's nought may not be won,When work with mind's unslumbering energy and thought is done

Explanation

There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavour

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.

Solomon Pappaiah

மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.

Kalaignar

மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை