Kural 539

Thiru Kural 539

Chapter 54: பொச்சாவாமை

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்

மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

Ikazhchchiyin Kettaarai Ulluka Thaandham

Makizhchchiyin Maindhurum Pozhdhu

English Translation

When joy deludes, their fate recall Whom negligence has made to fall

Couplet

Think on the men whom scornful mind hath brought to nought,When exultation overwhelms thy wildered thought

Explanation

Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்க வேண்டும்.

Solomon Pappaiah

தம் மகிழ்ச்சியில் மனவலிமை பெறும்பொழுது எல்லாம் முற்காலத்தில் மகிழ்ச்சியால் மறதி கொண்டு அழிந்தவர்களை நினைவிற் கொள்க.

Kalaignar

மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்