Kural 564

Thiru Kural 564

Chapter 57: வெருவந்த செய்யாமை

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்

உறைகடுகி ஒல்லைக் கெடும்.

Iraikatiyan Endruraikkum Innaachchol Vendhan

Uraikatuki Ollaik Ketum

English Translation

As men the king a tyrant call His days dwindled, hasten his fall

Couplet

'Ah! cruel is our king', where subjects sadly say,His age shall dwindle, swift his joy of life decay

Explanation

The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.

Solomon Pappaiah

நம்மை ஆளுவோர் மிகவும் கொடியவர் என்று குடிமக்களால் சொல்லப்படும் கொடுஞ் சொல்லைப் பெற்ற ஆட்சி அதன் ஆட்சிக் காலம் குறைந்து விரைவி்ல் அழியும்.

Kalaignar

கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடிமக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்