Kural 568

Thiru Kural 568

Chapter 57: வெருவந்த செய்யாமை

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்

சீறிற் சிறுகும் திரு.

Inaththaatri Ennaadha Vendhan Sinaththaatrich

Cheerir Sirukum Thiru

English Translation

The king who would not take counsels Rages with wrath-his fortune fails

Couplet

Who leaves the work to those around, and thinks of it no more;If he in wrathful mood reprove, his prosperous days are o'er

Explanation

The prosperity of that king will waste away, who without reflecting (on his affairs himself), commits them to his ministers, and (when a failure occurs) gives way to anger, and rages against them

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.

Solomon Pappaiah

தன் உடன் அமைச்சர்களுடன் கலந்து பேசிச் செயற்படாத அரசு, தன்னைச் சினவழி நடத்தித் தவறு வரும்போது அமைச்சர்களைச் சினந்தால், அரசின் செல்வம் நாளும் குறையும்.

Kalaignar

கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும்