Kural 572

Thiru Kural 572

Chapter 58: கண்ணோட்டம்

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்

உண்மை நிலக்குப் பொறை.

Kannottath Thulladhu Ulakiyal Aqdhilaar

Unmai Nilakkup Porai

English Translation

World lives by looks of lovely worth Who lack them are burdens of earth

Couplet

The world goes on its wonted way, since grace benign is there;All other men are burthen for the earth to bear

Explanation

The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is a burden to the earth

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை.

Solomon Pappaiah

மக்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு பாரமே.

Kalaignar

அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள்