Kural 606

Thiru Kural 606

Chapter 61: மடி இன்மை

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்

மாண்பயன் எய்தல் அரிது.

Patiyutaiyaar Patramaindhak Kannum Matiyutaiyaar

Maanpayan Eydhal Aridhu

English Translation

With all the wealth of lords of earth The slothful gain nothing of worth

Couplet

Though lords of earth unearned possessions gain,The slothful ones no yield of good obtain

Explanation

It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any great benefit from it

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.

Solomon Pappaiah

நிலம் முழுவதும் ஆண்ட மன்னர்களின் செல்வம் எல்லாம் சேர்ந்திருந்தாலும், சோம்பலை உடையவர் நல்ல பயனை அடைவது அரிது.

Kalaignar

தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்