Chapter 61

மடி இன்மை

Matiyinmai

Unsluggishness

10 kurals

Kural 601 குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.
Quenchless lamp of ancestry goes When foul idleness encloses
Kural 602 மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
To make your home an ideal home Loath sloth as sloth; refuse it room
Kural 603 மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.
The fool who fosters sluggishness Before he dies ruins his house
Kural 604 குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.
Who strive not high, sunk deep in sloth Ruin their house by evil growth
Kural 605 நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.
To lag, forget, idle and doze These four are pleasure boats of loss
Kural 606 படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.
With all the wealth of lords of earth The slothful gain nothing of worth
Kural 607 இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.
The slothful lacking noble deeds Subject themselves to scornful words
Kural 608 மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.
If sloth invades a noble house It will become a slave of foes
Kural 609 குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.
The blots on race and rule shall cease When one from sloth gets his release
Kural 610 மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.
The slothless king shall gain en masse *All regions trod by Lord apace * Hindu mythology holds that Lord Vishnu measured with his feet the three worlds