Kural 647

Thiru Kural 647

Chapter 65: சொல்வன்மை

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

Solalvallan Sorvilan Anjaan Avanai

Ikalvellal Yaarkkum Aridhu

English Translation

No foe defies the speaker clear Flawless, puissant, and free from fear

Couplet

Mighty in word, of unforgetful mind, of fearless speech,'Tis hard for hostile power such man to overreach

Explanation

It is impossible for any one to conquer him by intrique who possesses power of speech, and is neither faulty nor timid

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

தான் கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய் சொல்லும் போது சோர்வு இல்லாதவனாய், அஞ்சாதவனாய் உள்ளவனை மாறுபாட்டால் வெல்வது யார்க்கும் முடியாது.

Solomon Pappaiah

தான் எண்ணியதைப் பிறர் ஏற்கச் சொல்லும் ஆற்றல் உள்ளவன், சொல்லும் செய்தி கடினமானது என்றாலும் சோர்வு இல்லாதவன், கேட்பவர் பகையாளர் என்றாலும் அஞ்சாதவன் இவன்மீது பகைகொண்டு வெல்வது எவர்க்கும் கடினமே.

Kalaignar

சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது