Kural 709

Thiru Kural 709

Chapter 71: குறிப்பறிதல்

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்

வகைமை உணர்வார்ப் பெறின்.

Pakaimaiyum Kenmaiyum Kannuraikkum Kannin

Vakaimai Unarvaarp Perin

English Translation

Friend or foe the eyes will show To those who changing outlooks know

Couplet

The eye speaks out the hate or friendly soul of man;To those who know the eye's swift varying moods to scan

Explanation

If a king gets ministers who can read the movements of the eye, the eyes (of foreign kings) will (themselves) reveal (to him) their hatred or friendship

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால்( ஒருவனுடைய மனதில் உள்ள) கையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லி விடும்.

Solomon Pappaiah

அடுத்தவர்களின் பார்வை வேறுபடுவதைக் கொண்டே அவர்தம் மனக்கருத்தை அறியும் ஆற்றல் உடையவர்க்கு, பகைமையையும் நட்பையும் அவர்கள் சொல்லவில்லை என்றாலும் அவர்தம் கண்களே சொல்லிவிடும்.

Kalaignar

பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள், ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தில் இருப்பது நட்பா, பகையா என்பதைக் கூறிவிடுவார்கள்