Kural 736

Thiru Kural 736

Chapter 74: நாடு

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா

நாடென்ப நாட்டின் தலை.

Ketariyaak Ketta Itaththum Valangundraa

Naatenpa Naattin Thalai

English Translation

The land of lands no ruin knows Even in grief its wealth yet grows

Couplet

Chief of all lands is that, where nought disturbs its peace;Or, if invaders come, still yields its rich increase

Explanation

The learned say that the best kingdom is that which knows no evil (from its foes), and, if injured (at all), suffers no diminution in its fruitfulness

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்.

Solomon Pappaiah

பகைவரால் கெடுதலை அறியாததாய், அறிந்தாலும் வளம் தருவதில் குறையாததாய் இருப்பதையே நாடுகளில் சிறந்தது என்று அறிந்தோர் கூறுவர்.

Kalaignar

எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல் ஏற்படினும் அதனைச் சீர் செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும்