Chapter 74

நாடு

Naatu

The Land

10 kurals

Kural 731 தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.
It's country which has souls of worth Unfailing yields and ample wealth
Kural 732 பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.
The Land has large luring treasure Where pests are nil and yields are sure
Kural 733 பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு.
It's land that bears pressing burdens And pays its tax which king demands
Kural 734 உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.
It is country which is free from Fierce famine, plague and foemen's harm
Kural 735 பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.
Sects and ruinous foes are nil No traitors in a land tranquil
Kural 736 கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.
The land of lands no ruin knows Even in grief its wealth yet grows
Kural 737 இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.
Waters up and down, hills and streams With strong forts as limbs country beams
Kural 738 பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.
Rich yield, delight, defence and wealth Are jewels of lands with blooming health
Kural 739 நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.
A land is land which yields unsought Needing hard work the land is nought
Kural 740 ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.
Though a land has thus every thing It is worthless without a king