Kural 740

Thiru Kural 740

Chapter 74: நாடு

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே

வேந்தமை வில்லாத நாடு.

Aangamai Veydhiyak Kannum Payamindre

Vendhamai Villaadha Naatu

English Translation

Though a land has thus every thing It is worthless without a king

Couplet

Though blest with all these varied gifts' increase,A land gains nought that is not with its king at peace

Explanation

Although in possession of all the above mentioned excellences, these are indeed of no use to a country, in the absence of harmony between the sovereign and the sujects

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைதிருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமல் போகும்.

Solomon Pappaiah

மேலே சொல்லப்பட்ட எல்லாம் இருந்தாலும் குடிமக்கள் மீது அன்பு இல்லாத அரசு அமைந்துவிட்டால் அதனால் ஒரு நன்மையும் இல்லை.

Kalaignar

நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும்