Kural 862

Thiru Kural 862

Chapter 87: பகை மாட்சி

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்

என்பரியும் ஏதிலான் துப்பு.

Anpilan Aandra Thunaiyilan Thaandhuvvaan

Enpariyum Edhilaan Thuppu

English Translation

Loveless, aidless, powerless king Can he withstand an enemy strong?

Couplet

No kinsman's love, no strength of friends has he;How can he bear his foeman's enmity

Explanation

How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe ?

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்.

Solomon Pappaiah

மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலி‌மையை எப்படி அழிக்க முடியும்?

Kalaignar

உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?