Kural 864

Thiru Kural 864

Chapter 87: பகை மாட்சி

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்

யாங்கணும் யார்க்கும் எளிது.

Neengaan Vekuli Niraiyilan Egngnaandrum

Yaanganum Yaarkkum Elidhu

English Translation

The wrathful restive man is prey To any, anywhere any day

Couplet

His wrath still blazes, every secret told; each dayThis man's in every place to every foe an easy prey

Explanation

He who neither refrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by all

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.

Solomon Pappaiah

கோபம் குறையாத, ரகசியங்களைக் காக்கத் தெரியாத அரசைத் தோற்கடிப்பது எப்போதும், எங்கும், எவர்க்கும் எளிது.

Kalaignar

சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம்