Kural 897

Thiru Kural 897

Chapter 90: பெரியாரைப் பிழையாமை

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்

தகைமாண்ட தக்கார் செறின்.

Vakaimaanta Vaazhkkaiyum Vaanporulum Ennaam

Thakaimaanta Thakkaar Serin

English Translation

If holy mighty sages frown Stately gifts and stores who can own?

Couplet

Though every royal gift, and stores of wealth your life should crown,What are they, if the worthy men of mighty virtue frown

Explanation

If a king incurs the wrath of the righteous great, what will become of his government with its splendid auxiliaries and (all) its untold wealth ?

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

தகுதியால் சிறப்புற்ற பெரியவர் ஒருவனை வெகுண்டால் அவனுக்கு பலவகையால் மாண்புற்ற வாழ்க்கையும் பெரும் பொருளும் இருந்தும் என்ன பயன்.

Solomon Pappaiah

குணங்களால் சிறந்த பெரியவர்கள் சினங்கொள்வார் என்றால், பலத்தால் சிறந்த வாழ்க்கையும், பெரும்பொருளும் எதற்கு ஆகும்?

Kalaignar

பெருஞ்செல்வம் குவித்துக்கொண்டு என்னதான் வகைவகையான வாழ்க்கைச் சுகங்களை அனுபவித்தாலும், தகுதி வாய்ந்த பெரியோரின் கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப் போகும்