Kural 905

Thiru Kural 905

Chapter 91: பெண்வழிச் சேறல்

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்

நல்லார்க்கு நல்ல செயல்.

Illaalai Anjuvaan Anjumar Regngnaandrum

Nallaarkku Nalla Seyal

English Translation

Who fears his wife fears always Good to do to the good and wise

Couplet

Who quakes before his wife will ever tremble too,Good deeds to men of good deserts to do

Explanation

He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.

Solomon Pappaiah

தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.

Kalaignar

எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்