Chapter 91

பெண்வழிச் சேறல்

Penvazhichcheral

Being led by Women

10 kurals

Kural 901 மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது.
Who dote on wives lose mighty gain That lust, dynamic men disdain
Kural 902 பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.
Who dotes, unmanly, on his dame His wealth to him and all is shame
Kural 903 இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.
Who's servile to his wife always Shy he feels before the wise
Kural 904 மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.
Fearing his wife salvationless The weaklings' action has no grace
Kural 905 இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.
Who fears his wife fears always Good to do to the good and wise
Kural 906 இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.
Who fear douce arms of their wives Look petty even with god-like lives
Kural 907 பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.
Esteemed more is women bashful Than man servile unto her will
Kural 908 நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட் டாங்கு ஒழுகு பவர்.
By fair-browed wives who are governed Help no friends nor goodness tend
Kural 909 அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.
No virtue riches nor joy is seen In those who submit to women
Kural 910 எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
Thinkers strong and broad of heart By folly on fair sex do not dote