Kural 930

Thiru Kural 930

Chapter 93: கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்

உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

Kallunnaap Pozhdhir Kaliththaanaik Kaanungaal

Ullaankol Untadhan Sorvu

English Translation

The sober seeing the drunkard's plight On selves can't they feel same effect?

Couplet

When one, in sober interval, a drunken man espies,Does he not think, 'Such is my folly in my revelries'

Explanation

When (a drunkard) who is sober sees one who is not, it looks as if he remembered not the evil effects of his (own) drink

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒருவன் தான் கள் உண்ணாத போது கள்ளுண்டு மயங்கினவளைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ.

Solomon Pappaiah

போதைப் பொருளை ஒருவன் பயன்படுத்தாத போது, அதைப் பயன்படுத்தி இருப்பவனைப் பார்த்துத் தான் பயன்படுத்தும்போது தனக்கும் இத்தகைய நிலைதானே உண்டாகும் என்று எண்ணிப் பார்க்கமாட்டானோ?

Kalaignar

ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?