Chapter 93

கள்ளுண்ணாமை

Kallunnaamai

Not Drinking Palm-Wine

10 kurals

Kural 921 உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.
Foes fear not who for toddy craze The addicts daily their glory lose
Kural 922 உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.
Drink not liquor; but let them drink Whom with esteem the wise won't think
Kural 923 ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.
The drunkard's joy pains ev'n mother's face How vile must it look for the wise?
Kural 924 நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
Good shame turns back from him ashamed Who is guilty of wine condemned
Kural 925 கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.
To pay and drink and lose the sense Is nothing but rank ignorance
Kural 926 துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
They take poison who take toddy And doze ev'n like a dead body
Kural 927 உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்
The secret drunkards' senses off Make the prying public laugh
Kural 928 களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
Don't say I'm not a drunkard hard The hidden fraud is known abroad
Kural 929 களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
Can torch search one in water sunk? Can reason reach the raving drunk?
Kural 930 கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
The sober seeing the drunkard's plight On selves can't they feel same effect?